Monday, January 28, 2008

அரிசி, கோதுமை, காய்கறி உற்பத்தியில் இந்தியா சாதிக்கும் - தினமலர்


புதுடில்லி: மரபுவழி மாற்றியமைக்கப் பட்ட தொழில்நுட்பத்தின் (ஜி.எம்.,) மூலம் பருத்தி மட்டுமின்றி, ஜி.எம்.,அரிசி, கோதுமை, காய்கறிகள் உற்பத்தி செய்வதில்

சர்வதேச அளவில் இந்தியா இன்னும் இரண்டாண்டுகளில் சாதிக்கும்.இந்திய விவசாய, பயோடெக் துறையில் ஆய்வு செய்யும் பிரபல அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயத்தில் தொழில்நுட்பங்களை புகுத்தும் முயற்சி, இந்தியாவில் அதிக அளவில் நடந்து வருகிறது. விவசாயத்தில் `பயோடெக்னாஜி'யை அதிக அளவில் புகுத்தி, மரபுவழி உற்பத்தியை மாற்றியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வறண்ட நிலத்திலும், உப்பு நீரிலும் வளரும் வகையிலும் அரிசி உட்பட பல உணவு வகைகளின், வித்துக்களில் மரபு வழி மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் புகுத்தப்படுகிறது.

இந்தியாவில் அரிசி, கோதுமை, பருத்தி, காபி, புகையிலை, பழங்கள், காய்கறிகள் ஆகிய 17 வகை பயிர்களில், ஜி.எம்.,தொழில்நுட்பத்தை புகுத்தி, உற்பத்தியை பெருக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பூச்சிக்கொல்லிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது, வைரஸ் மற்றும் காளான் தாக்குதலை தடுப்பது, வறட்சியை தாங்குவது, வெள்ளம் பாதித்தாலும் சமாளித்து விளைச்சல் பாதிக்காமல் செய்வது, உப்பு நீராக இருந்தாலும், பயிர் விளைவிப்பது ஆகிய விஷயங்கள் குறித்து, மரபுவழி மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.அந்த வகையில், எதிர்காலத்தில் விவசாயம் செய்யப்படும்; விளைச்சலும் அதிகரிக்கும். பல மாநிலங்களிலும், மரபுவழி மாற்றியமைப்பு தொழில்நுட்பம் மூலம் பயிர்களை விளைவித்து ஆய்வுகள் நடந்துவருகின்றன.இப்போதுள்ள ஆய்வு முடிவுகளின் படி விவசாயம் மேற்கொள்ளப்பட்டால், வரும் 2010 ம் ஆண்டில், உலகில் இந்தியா தான் அதிக அளவில் ஜி.எம்.,அரிசி, கோதுமை, காய்கறிகளை விளைவிக்கும் நாடாக இருக்கும்; அதிக அளவில் ஏற்றுமதியையும் செய்யும்.இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Friday, January 25, 2008

விவசாயம் - லாபம் மிக்க தொழில்

இந்தியாவின் இதயம் கிராமம்.
இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.

அடடா...

ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer...
மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,
விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...

தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...

நல்லது. இதனை எப்படி சாதிக்கப் போகிறோம்? என்னை விட இந்த விசயத்தை மிக நல்ல முறையில் பல பேர் அணுகியிருக்கலாம். ஆனாலும், எனக்கு தோன்றியதை சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.

1. விவசாயம் பெரும் பாலும் பாதிக்கப் படுவது மழை பொய்ப்பதும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீரழிவுகளாலும்தான். இந்த எதிர்பாரத விளைவுகளை, நஷ்டத்தை காப்பீடு (Insurance) செய்வதன் மூலம் தவிர்கலாம். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
2. வேளாண்மை பல்கலைகழகங்களில் நடக்கும் ஆராய்ச்சியின் பயன், விவசாயியை சென்றடைய வேண்டும்.
3. பல்வேறு பணப்பயிர் (மூலிகை, ஆமணக்கு மற்றும் பிற ஏற்றுமதிக்கு உரிய பயிர்கள்) பற்றிய விவரங்கள் கிடைக்க வேண்டும்.
4. கிராமம் தோறும், விளை பொருட்களை விவசாயின் நேரடி விற்பணைக்கு எடுத்துச் செல்ல, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
5. ஒருங்கிணைந்த ஏற்றுமதி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்
6. ஆண்டு முழுவதும் வருமானம் வரும்படி, ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு முறைகளில் அறிவியல் கலந்த, அதிகம் பலன் தரக் கூடிய முறைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக, ஒரு கிராமத்தை தத்து எடுத்து, சோதனை முறையில் செயல் படுத்தி, சாதனையாக்க வேண்டும்.

இதன் முன்னோட்டமாக, வரும் ஜுலை மாதம், முதன் முறையாக, வயல் (தோப்பு/காடு) வாங்குவதற்கு தயாராகி வருகிறேன்.

இங்கு, அமெரிக்காவில், அனைத்துமே நடைமுறையில் உள்ளது.

விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...

ம்ம்... அது அவ்வளவு சுலபமா? இது என்ன ரஜினி படமா? ஒரு பாட்டு முடியற நேரத்துல சாதிக்கிறதுக்கு...
ஆனா எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுதே... முடியும்னு...

ஈ.வே.இராமசாமி என்ற ஒரு தனி மனிதனின் மனதில், இந்த சமுதாய பொய்மைகளை கண்டு உருவான ஒரு தீப்பொரி தானே நமக்கு தந்தை பெரியாரை அடையாளம் காட்டியது, மூட நம்பிக்கைகளை சுட்டு பொசுக்கியது,

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்ற சாதாரண மனிதனுக்கு ஏற்பட்ட அவமானமும், அதனை தொடர்ந்து எழுந்த விடுதலை வேட்கையும், நமக்கு உலகமே கொண்டாடும் மாகாத்மா காந்தியை அடையாளம் காட்டியது. அஹிம்சையின் வலிமையை எடுத்து சொன்னது...

இதோ... இங்கு நான் மட்டும் இல்லை... இதை படிக்கும், நீங்களும் இணையும் போது, ஏன் முடியாது?